ஜூன் 13 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் ஜூன் 13 ஆம் தேதி ஆசிரியர் தொகுதி தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்குக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகத் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததும் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. எப்போதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து தேர்வுகளும் நடத்தி முடித்துவிட்டு கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும். ஆனால், இந்தாண்டு காலம் தாழ்த்தி தான் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் மே இறுதி வரைக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்க இருப்பதால் கட்டாயமாக மாணவர்கள் மாஸ்க் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முடிந்த வரைக்கும் பள்ளிகளை சுத்தமாக வைத்திருக்கவும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ஜூன் 13 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் ஆசிரியர் தொகுதி தேர்தல் நடைபெற இருப்பதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஜயபுரா, பாகல்கோட், மைசூர், பெல்காம், சாம்ராஜ்நகர், மாண்டியா, ஹாசன், தார்வாட், ஹாவேரி, கடக் மற்றும் உத்தர கன்னடா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அரசு, உதவி பெறும் மற்றும் உதவி பெறாத அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.