மயூவிற்காக மனம் மாறும் ராதிகா, கோபியை ஏற்றுக் கொள்வாரா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரிந்த பின்னர் ராதிகாவால் கோபியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் ராதிகாவின் அம்மா கோபிக்கு ஆதரவாக இருக்கிறார். இந்நிலையில் மயூரா கோபியை நினைத்து வருத்தப்பட அதனால் ராதிகாவின் மனம் மாற இருக்கிறது. இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தன்னுடைய குடும்பத்தை பற்றி மறைத்தால் ராதிகாவால் கோபியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோபியின் மனைவி தான் பாக்கியா என்ற உண்மை தெரிந்த பின் ராதிகா பாக்கியாவை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார். ஆனால் ராதிகாவின் அம்மா பாக்கியாவை பற்றி நினைக்காமல் உன்னுடைய வாழ்க்கையை மட்டுமே நினைக்க வேண்டும் என சொல்ல ஆனால் ராதிகாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!
மறுபக்கம் கோபி ராதிகாவை தேடி பல முறை வர ஆனால் ராதிகா அவரை அவாமனப்படுத்தி அனுப்புகிறார். அதனால் கோபி மிகுந்த வருத்தத்தில் இருந்தாலும், ராதிகாவின் அம்மா கோபிக்கு ஆதரவாக இருப்பதால் சற்று ஆதரவாக இருக்கிறார். இதற்கிடையே பாக்கியா கோபியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதால் அதை பற்றியே யோசித்து குடும்பத்திடம் சந்தோசமாக இருக்காமல் இருக்கிறார். அதனால் ராமமூர்த்தி தாத்தா எல்லாம் சரியாகிவிடும் என தைரியம் சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபியை பார்க்காமல் மயூரா வருத்தப்படுறார். கோபி நல்லவர் என நீங்க தான் சொன்னீங்க அவர் இன்னும் சில நாட்களில் நம்ம உடன் வந்துவிடுவார் என சொன்னீங்க. ஆனால் இப்போது பேச கூடாது என சொல்லி இருக்கீங்க என வருத்தமாக பேச அதை நினைத்து ராதிகா மிகவும் அதிர்ச்சி அடைகிறார். மயூராவிற்காக ராதிகாவின் மனம் மாற இருக்கிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதனால் இனி ராதிகா நெகட்டிவ் ரோலாக மாறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.