தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஜூன் 12ம் தேதி இப்பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
பூமியில் வாழும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் எனபது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்னணு சாதனங்களில் கோளாறு, மின் தொய்வு மற்றும் மின்னணு துண்டிப்பு ஆகியவை நடைபெறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுப்பதற்காக மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!
மேலும், வயர்களில் உரசும் மரக்கிளைகள் அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே மின்வாரியம் மூலம் அறிவிக்கப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
மேலும், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளான பரமன் குறிச்சி, எள்ளுவிளை, வட்டன்விளை, கரிசல் விளை, சுண்டங்கோட்டை, உடைபிறப்பு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, குலசேகரப்பட்டிணம் மெயின்ரோடு, சீருடையார்புரம், சுந்தரபுரம், நெடுங்குளம், புளியங்குளம், செட்டியாபத்து, தாங்கையூர், கெங்கம்மாள் புரம், சமத்துவபுரம், மணிநகர், இடைச்சிவிளை ஆகிய பகுதிகளில் நாளை ஜூன் 12ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் மின்தடை செய்ய உள்ளதாக மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.