தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு – விரைவில் அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
TET தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த தகுதித்தேர்வை எழுதுவதற்கு ஒருவர் பட்டப்படிப்புடன், B.Ed எனப்படும் கல்வியியல் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். அந்த வகையில் TET தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த செயல்பாடுகள் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஜூன் 13ம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது – ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு!
அந்த வகையில் தமிழகத்திலும் TET தேர்வு கட்டாயம் என்ற பள்ளிக்கல்வி இயக்ககத்தின் செயல்முறைகள் 2012ம் ஆண்டு முதல் அமலில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டுக்கு முன் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த பத்து வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் பல்வேறு பாகுபாடுகள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் TET தேர்வு தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் 10 ஆண்டுகால கற்பித்தலின் அடிப்படையில் அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, 2012ம் ஆண்டுக்கு முன் அரசுப் பள்ளிகளில் நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பு வெளியானால், 23/8/2010க்கு பிறகு நிரந்தர பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை அல்லது சிறுபான்மையற்ற பள்ளிகளின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 23/08/2010க்கு பின் பதவி உயர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் இருப்பவர்கள், சத்துணவுத் துறையில் பணி நியமனம் பெற்று 23/08/2010க்கு பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள், நீதிமன்ற வழிகாட்டல் அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து வருபவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.