தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை – பொது இடத்தில் ‘இதை’ செய்தால் அபராதம்!
தமிழகத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது, அதாவது பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நடைமுறை:
புகைப்பிடிக்க தடை என பொது இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும் அதனை யாரும் கடைபிடிப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இந்தியாவில் குப்பையில் கொட்டப்படும் புகையிலை கழிவு பொருட்களை சுத்தப்படுத்த ஆண்டுக்கு 76.66 கோடி ரூபாயை அரசு செலவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் – 2003 அமலில் இருந்தாலும், அவற்றை அரசு தீவிரப்படுத்தாததால் ஆண்டுக்கு 82.38 லட்சம் கிலோ புகையிலைக் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Exams Daily Mobile App Download
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் நிர்வாகி சிரில் அலெக்சாண்டர் கூறியது, பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூபாய் 2,000 அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா? மத்திய அரசு விளக்கம்!
மேலும் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட 20 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அபராத தொகை 200 இல் இருந்து 2000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும், பொது இடத்தில் புகைப் பிடிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.