இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா? மத்திய அரசு விளக்கம்!
கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், மங்கிபாக்ஸ் எனப்படும் ‘குரங்கு அம்மை’ நோய் தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த பாதிப்பு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
‘குரங்கு அம்மை’ நோய்:
உலக நாடுகள் பல கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் இந்த நேரத்தில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மங்கிபாக்ஸ் எனப்படும் “குரங்கு அம்மை” நோய் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 நாடுகள் இந்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோயின் முதல் அறிகுறியாக காய்ச்சல், உடல் வலி, தலை வலி போன்றவை இருக்கிறது. அதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பின் உடல் முழுவதும் சிவப்பு புள்ளி வரும் அதன் பின் அவை கொப்புளங்களாக மாறுகின்றன,
Exams Daily Mobile App Download
இந்த நோயால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் இருந்தால் இந்த நோய் தாக்கத்தால் உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும். பெரியம்மையின் குணாதியசங்களை கொண்டுள்ளதால், அதற்கான தடுப்பூசியை பயன்படுத்தலாமா என்பது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்கம் இந்தியாவில் இல்லை என்றாலும், உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவருக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
அதனால் அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறார். சிறுமியோ அல்லது அவர்களது உறவினர்கள் யாரும் கடந்த 1 மாதத்தில் வெளிநாடு செல்லாத நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சிறுமி வசிக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த சிறுமியின் ஆய்வு முடிவுகள் வந்த பின் உறுதியாக தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.