தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி அச்சத்தை அதிகரித்து வரும் நிலையில், குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
கொரோனா பெருந்தொற்று 3 அலைகளாக உருவெடுத்து மக்களை அதிக பாதிப்பிற்குள்ளாகியது. இந்த தொற்றை கட்டுப்படுத்த பல கட்டங்களாக ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு போடப்பட்டு வருகிறது. இதன் பலனாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சற்று நிம்மதி அடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை இயக்ககம், மாவட்ட சுகாதாரத் துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது. அதாவது அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை, கோவை போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களில் சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதனை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் விரைவில் அதீநவீன பிஎம் ஸ்ரீ பள்ளிகள் துவக்கம் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்!
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தலைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் தொடங்குகிறது. இது நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது (லிம்பேடனோபதி), இது பெரியம்மை பாதிப்பில் ஏற்படாது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒருவரின் முகத்தில் கொப்பளம் இருந்ததாகவும் மாதிரிகளை புனேவிற்கு அனுப்பி பரிசோதித்ததில் குரங்கு அம்மை இல்லை என முடிவு வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்படவில்லை, எனவே மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ள வேண்டாம், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்தாலே போதும் என விளக்கம் அளித்துள்ளார்.