இந்தியாவில் விரைவில் அதீநவீன பிஎம் ஸ்ரீ பள்ளிகள் துவக்கம் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஒரு பகுதியாக பிஎம் ஸ்ரீ என்ற அதீநவீன பள்ளிகளை உருவாக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் உருவாக்கம்
சமீபத்தில் நடைபெற்ற தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் 2வது நாள் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசாங்கம் பிஎம் ஸ்ரீ என்ற அதீநவீன பள்ளிகளை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் அளித்துள்ளார். அதாவது, இந்தியாவின் எதிர்காலத்துக்காக மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்ற அதீநவீன பள்ளிகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பிஎம் ஸ்ரீ என்ற அதீநவீன பள்ளிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அடிப்படை கல்வி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்’ என்று கூறினார்.
BECIL நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
மேலும் 21ம் நூற்றாண்டில் கல்வி, திறன் மற்றும் சுற்றுச்சூழலை வலுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். இப்போது வரும் நூற்றாண்டிற்காக மாணவர்களை தயார்படுத்தும் விதமாக பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான மாதிரியை உருவாக்க தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.