தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – இது சரியான முடிவா?
தமிழ்நாடு அரசு வீண் செலவுகளை எப்படி குறைப்பது என்பது குறித்து ஆராய்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி வயதை உயர்த்திக் கொண்டே சென்றால், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமே என்று கேள்வி எழுந்தது.
முதல்வரின் முடிவு என்ன:
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என தி.மு.க உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு தி.மு.கவும் இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக பலதரப்பிலிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடாமல் இருப்பதால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 62 ஆக உயர்த்த, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக, இணையத்தில் சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், ஓய்வு வயதை, 62 ஆக உயர்த்த முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
மேலும் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால், நிலையை எப்படி சமாளிப்பது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் தீவிரமாக துறைசார்ந்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது அவர்களுக்கு முறையாக வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை தர போதிய நிதி இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. அதாவது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்துவதற்கான வேலை தீவிரமாக நடக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.