TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TNTET 2022) ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது , TET தேர்வு தேதி குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.
தேர்வு ஜூலை மாதம்:
தமிழகத்தில் கொரோனா வருகையால், எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது தாக்கம் குறைந்து, அனைத்து துறையில் இருந்து போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன.
Exams Daily Mobile App Download
இதற்கிடையே, பி.எட். இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு (Diploma in Teacher Education) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate-னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு வாரியம் முன்னதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் நாளை (மே 28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் TN TET தாள் 1’இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் தாள் 2’இல் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு அறிவிப்பின்படி, இரண்டு தாள்களிலும் தலா ஒரு மதிப்பெண் கொண்ட 150 மல்டிபிள் சாய்ஸ் (MCQ) கேள்விகள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். மேலும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று வரை இந்த தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் சில வட்டாரங்கள் வருகின்ற ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்ததும் ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த அதிகாரிகள் காத்து கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.