தமிழகத்தில் நாளை (மே 28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் நாளை கமுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (மே 28) கமுதியில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை மின்தடை ஏற்படும் என்று கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் நாள்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு பிரச்சனை காரணமாக எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. மேலும் இதனை மின்வாரியம் முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் இருக்கும் 11 கே.வி.கமுதி மின் பாதையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்தடை செய்யப்படும் என்று கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நாளை (மே 28) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும் என்று கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தயுடன் மின் விநியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு?
இதனை தொடர்ந்து 11 கே.வி.கமுதி மின் பாதையில் பராமரிப்பு காரணமாக கமுதி பஸ் நிறுத்தம், மேலராமநதி, காவடிப்பட்டி, கண்ணார்பட்டி, முத்துமாரி நகர், தர்கா ரோடு, ஆதி பராசக்தி நகர், வெள்ளையத்தேவன் நகர், தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி மின்விநியோகம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.