தமிழகத்தில் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வூதியர்கள் சங்கம், அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
அகவிலைப்படி என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையாகும். இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். இது ஆண்டுக்கு ஜனவரி, ஜூலை என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக இருந்தது. இந்நிலையில் 3% உயர்த்தி அகவிலைப்படி 34% ஆக அதிகரித்துள்ளது. மேலும் அகவிலைப்படி என்பது அடிப்படை சம்பளத்தை வைத்து கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.
தமிழகத்தில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அதனால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க திருமங்கலம் கிளையின் செயற்குழு கூட்டம் தலைவர் மகபூப் பாட்ஷா தலைமையில் நேற்று நடந்தது.
Exams Daily Mobile App Download
மேலும் செயலாளர் நடராஜன் செயலாளர் அறிக்கையும், பொருளாளர் பாலகிருஷ்ணன் பொருளாளர் அறிக்கை வாசித்தனர். அந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்க வேண்டும். இதையடுத்து தேர்தல் அறிக்கையின்படி 70 வயது ஓய்வு ஊழியர்களுக்கு 10% ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாத சந்தா தொகை ரூ.150 பிடித்தம் செய்யப்படுகிறது, எனவே ஓய்வூதியர் இறக்கும் போது வழங்கப்படும் தொகை ரூ 50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து, விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.