தமிழகத்தில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பது பற்றி சென்னை வானிலை மையம் தகவல்களை வெளியிட்டு உள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மே 23 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து நாளை மே 24, மறுநாள் மே 25 மற்றும் மே 26, மே 27ந் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி?
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அந்நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றைய நாளான மே 23ல் இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், இன்று மே 23 மற்றும் நாளைய தினம் மே 24 அன்று தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.