TET தேர்வு ஒத்திவைப்பு? மாநில கல்வி அமைச்சர் விளக்கம்!
தெலுங்கானாவில் TET தேர்வு ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் ரயில்வே தேர்வும் இருப்பதால் TET-ஐ ஒத்திவைக்குமாறு அமைச்சர் கேடிஆரிடம் ஒருவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த கேடிஆர், இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியை கேட்டுக் கொண்டார். இது குறித்து கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
TET தேர்வு
கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வில் (TET தேர்வு) தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் TET தேர்வு ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. மேலும் அதே நாளில் ரயில்வே RRB தேர்வு நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வருவதால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆர்ஆர்பி இயங்கி வரும் நிலையில், TET தேர்வை ஒத்தி வைக்குமாறு ஒரு நபர் ட்விட்டர் மூலம் அமைச்சர் கேடிஆரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13ம் தேதியன்று வகுப்புகள் துவக்கம்?
இதற்கு பதிலளித்த கே.டி.ஆர், கோரிக்கையை பரிசீலிக்குமாறு கல்வி அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியிடம் கேட்டுக் கொண்டார். கேடிஆரின் ட்வீட்டுக்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,TET தேர்வை ஒத்திவைக்க முடியாது மற்ற போட்டித் தேர்வுகளுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் மாநிலத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வுத் தேதிகளும் மற்ற போட்டித் தேர்வுகளுடன் ஒத்துப்போகாமல் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. எனவே அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு TET தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என்று அவர் கூறினார்.
Exams Daily Mobile App Download
தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்வு அட்டவணை மார்ச் மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், TET தேர்வுகளை நடத்துவதற்கான தேர்வு மையங்களையும் அரசாங்கம் இறுதி செய்துள்ளது .மேலும் தாள் 1 க்கு 1480 மையங்களும், தாள் 2க்கு 1171 மையங்களும் அமைக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்த TET தேர்வு நடத்தப்படும் நிலையில், B.ed தேர்வர்களுக்கு தாள்-1 எழுத அரசு அனுமதி அளித்துள்ளது. TET தேர்வுக்கு மொத்தம் 6.29 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.