தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13ம் தேதியன்று வகுப்புகள் துவக்கம்?

0
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 13ம் தேதியன்று வகுப்புகள் துவக்கம்?
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 13ம் தேதியன்று வகுப்புகள் துவக்கம்?
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13ம் தேதியன்று வகுப்புகள் துவக்கம்?

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 13ம் தேதியன்று அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் மாற்றங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு

நடப்பு கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த ஆண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்த அரசாங்கம் இம்மாத துவக்கத்தில் இருந்து தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மற்றபடி, 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறைகள் முடிந்து வரும் ஜூன் 13ம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை காரணமாக பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 4 – 9 வரையிலான வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முடிவு!

இதனுடன், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளதாக தெரிகிறது. இப்போது இதற்கான பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 13ம் தேதிக்கு பின்னர் இருக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஜூன் மாதம் 4வது வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!