தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழக நிதி நிலைமை நெருக்கடியில் இருந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், திறமையாக செயல்பட்டு அனைத்து துறைகளிலும் பாரபட்சம் பார்க்காமல் நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. மேலும் அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் 9 லட்சம் பேருக்கு மேல் பயன்பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக கட்சி 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று கடந்த மே 7ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு அடைந்து உள்ளது. திமுக, ஆட்சிக்கு வரும் போது கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுத்த திமுக அரசு, கட்டளை மையத்தை உருவாக்கி மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய சூழல்களை கண்காணித்து வந்தது. இதன் பலனாக படிப்படியாக கொரோனா தாக்கம் குறையத் தொடங்கின.
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் உற்சாகம்!
மேலும் மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசாக 22 மளிகைப் பொருட்கள், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, இல்லம் தேடி கல்வி, மருத்துவம் போன்ற நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்து விட்ட நிலையில், இந்த ஒரு ஆண்டு காலத்தில் அரசு செய்த சாதனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் சட்டமன்றத்தில் பேசினார். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதால் 9 லட்சத்து 32 ஆயிரம் ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி 7 லட்சத்து 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2021 டிசம்பர் மாதத்தில் முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ஆசிரியர்கள், பென்ஷன்தாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 14 % உயர்த்தப்பட்டது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 % ஆக உயர்ந்தது. இதையடுத்து மற்ற திட்டங்கள் குறித்து பேசிய முதல்வர், 22 லட்சத்து 20 ஆயிரத்து 109 பேர் நகைக் கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களால் 54 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேர் கடன் பெற்றதாகவும், அவ்வாறு வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ததால் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 பேர் பயன் பெற்றதாகவும் தெரிவித்தார்.