சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் உற்சாகம்!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,144 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 4,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 க்கு குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை:
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் வணிக வளாகங்கள், மூடப்பட்டன. அத்தியாவசிய கடைகள் மற்றும் பொருட்கள் மட்டும் விற்க அனுமதி அளிக்கப்பட்டன. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தது. இதனால் நகைப் பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கில் தளர்வுகள் அமல் – நகர நிர்வாகம் அறிவிப்பு!
ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக பங்கு சந்தைகளில் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. இதனால் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து உள்ளன. இதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதன் விளைவாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இந்த வருடத்தில் தங்கத்தின் விலை 40,000 க்கு மேலாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4 குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் ரூ.39,144க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் 4,873 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து 66.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 66,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.