இந்திய அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு – 38,926 காலிப்பணியிடங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் 38,926 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பபதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதவிகள், தேர்வு முறை, வயது வரம்பு, கல்வித்தகுதி குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. மற்ற துறைகளை தொடர்ந்து வங்கி துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மொத்தம் 38,926 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி தபால் மாஸ்டர், மற்றும் டக் சேவக் ஆகிய பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி, குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
ESIC நிறுவனத்தில் ரூ.2, 28,942/- ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அஞ்சலகத்தின் கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.12,000 வழங்கப்படும். உதவி போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ. 10,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பொது பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் அவர் பணிபுரியும் இடத்திற்கு ஏற்றார் போல உள்ள உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும். தகுதிப் பட்டியலின் அடிப்படையில் அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.