தமிழகத்தில் தனியார் மயமாகும் அரசு பேருந்து சேவை – முக்கிய தகவல் வெளியீடு!
டெல்லி அரசு தனியார் மயமாகும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. இதன் மூலம் 30 சதவீத செலவினங்கள் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் அகமதாபாத்திலும் 7 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் அரசு பேருந்து கழகங்களில் உள்ள சில சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய தகவல்:
ஏழை,எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏனென்றால் தனியார் பேருந்துகளில், கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால், சாமானிய மக்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள சிரமப்படுவார்கள். இருப்பினும் தனியார் பேருந்துகளில் உள்ள கூடுதல் வசதி அரசு பேரூந்துகளில் இல்லை என்ற புகார் நீண்ட நாட்களாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு பேருந்து கழகங்களில் உள்ள சில சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அரசு பேருந்துகளில் குளிர்சாதன வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளன.
வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
இவற்றை களைய வேண்டும் என்றால், பொருட்செலவு அதிகமாகும். அதற்காக அரசு புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக தெரிகிறது. தனியாரிடம் ,பேருந்து சேவையை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டால், கட்டணங்கள் அதிகமாக இருக்கும், அதனால் சில சேவைகளை மட்டும் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து கழகங்களில் உள்ள பராமரிப்புச் சேவை, பாடி பில்டிங், பாதுகாவலர் நியமனம், கேன்டீன் போன்றவற்றை மட்டும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருச்சியில் அரசு பேருந்து கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களுடன் இணைந்து அரசு ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில், உயர்ந்து வரும் எரிபொருள் காரணமாக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
எனவே சில சேவைகளை மட்டும் தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற முயற்சித் தேவை என மேலாண்மை இயக்குநர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் சேவை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது, அதற்கு நேர காப்பாளர்கள் பேருந்துகள் சரிவர இயங்குகின்றனவா ? போதிய கூட்டம் பேருந்துகளில் உள்ளனவா ? என்பதை ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல், சில எளிமையான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச பாஸ் போன்ற சேவைகளும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.