மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முதல் அகவிலைப்படி திருத்தம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஜூலையில் மீண்டும் திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரியில் சரிவு இருந்தபோதிலும், மார்ச் மாதத்தில் ஏற்றம் கண்டுள்ளது. அதனால் ஜூலை மாத அகவிலைப்படி 4% வரை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாக்பாட் அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. ஜனவரி மாதத்தில் ஒரு முறையும் ஜூலை மாதத்தில் ஒரு முறையும் திருத்தப்படும். சூழ்நிலையைப் பொறுத்து அது திருத்தப்படாமலும் போகலாம். இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வை சில வாரங்களுக்கு முன்னர் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, அகவிலைப்படி தற்போது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
PM கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பு – வேளாண்துறை அறிவிப்பு!
மேலும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை அடுத்து ஜூலை மாதத்தில் அகவிலைப்படி மேலும் உயர்த்தப்படும் என்று ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். 2021 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 125.4 ஆக இருந்தது. ஆனால் 2022 ஜனவரி மாதத்தில் அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக பதிவாகியுள்ளது. அடுத்ததாக பிப்ரவரி மாதத்திலும் 0.1 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 1 புள்ளி ஏற்றம் ஏற்பட்டு 126 ஆக அதிகரித்தது.
Exams Daily Mobile App Download
இந்த புள்ளி விவரங்களின்படி, ஜூலை மாதத்தில் 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத புள்ளி விவரங்கள் வெளியான பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். வரும் மாதங்களிலும் இதே நிலை தொடர்ந்தால், அகவிலைப்படி அதிகரிப்பு 4 சதவீதம் வரை இருக்கலாம். எனவே ஜூலையில் அகவிலைப்படி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது காத்திருக்கின்றனர்.