PM கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பு – வேளாண்துறை அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் திட்டமாக பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழே ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து முழு விவரத்தையும் கீழே இந்த தொகுப்பில் பார்ப்போம்.
PM கிசான் திட்டம்:
இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 பிப்ரவரி 24, அன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும்,மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவதற்காக செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்கப் படுகிறது. அதனை தொடர்ந்து வருடம்தோறும் 3 முறை தவணையாக 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசின் இந்த திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தில் விவசாயிகள் சேர நீண்ட நாட்களாக இந்த திட்டத்துக்கான இணையதளம் திறக்காமல் இருந்தது. இதனால் புதிய விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பி.எம்.கிசான் இணையதளம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. அதனால் இதுவரை இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று வேளாண் துறையின் சார்பில் அறிவித்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இது குறித்து இந்திய வேளாண் துறை சில அறிவிப்புகளை வெளியீட்டு உள்ளது. அதாவது, PM கிசான் திட்டத்தில் சேராத புதிய விவசாயிகள் தற்போது சேருவதற்கான இணையதளம் திறக்கப்பட்டு இருப்பதால் இணைந்து கொள்ளலாம் என்றும், இதில் இணைவதற்கான கடைசி தேதி இந்த 31ஆம் தேதி என்றும், அதனை தொடர்ந்து ஏற்கனவே இந்த திட்டத்தில் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எடுத்துக் கொண்டு பொது சேவை மையத்திற்கு சென்று தங்கள் விரல் ரேகை பதிவு செய்து அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.