முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அமல்? நிர்வாகம் ஆலோசனை!
கடந்த 3 வார முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால், இப்போது ஊரடங்கை எளிதாக்க நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு தளர்வு
சுமார் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரத்தில் உள்ள அதிகாரிகள் இன்னும் ஒரு சில நாளைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சீனாவின் தொழில் நகரமான ஷாங்காய் கடந்த சில வாரங்களாக கடுமையான ஒமிக்ரான் பரவலை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஷாங்காய் நகரின் 25 மில்லியன் மக்கள் மீது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ECGC நிறுவனத்தில் ரூ.53,600 ஆரம்ப ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!
இந்த சூழலில் ஷாங்காயில் கொரோனா பரவுதல் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்புவதால் ஊரடங்கு எளிதாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு பின்னர் தொழிற்சாலைகள் மூடிய-லூப் அமைப்புகளில் உற்பத்திக்கு திரும்புகின்றன. சீனாவில் தற்போது, அனைத்து நேர்மறை வழக்குகளும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனை வசதிகளை பயன்படுத்தி கொரோனா பரவலை தடுத்து சமூக அளவிலான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை அடையவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதற்கிடையில் ஷாங்காயில் நேற்று (ஏப்ரல்.18) ஒரு நாளில் 21,395 லிருந்து 19,442 ஆக கொரோனா பாதிப்புகள் குறைந்திருக்கிறது. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியே 550 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் தொடங்கியதில் இருந்து 340,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வந்த நிலையில், இந்த பாதிப்பு இப்போது சரிபாதியாக குறைந்திருக்கிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் ஓமிக்ரான் திரிபு வேகமாக பரவிய போதிலும், சீனா அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையில் உறுதியாக உள்ளது கவனிக்கத்தக்கது.