TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றதன் மூலம் பணி நியமனம் வழங்கப்படும். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 இடங்கள் நிரப்பப்படும். அவற்றில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 9,000 பேர் பணிக்கு நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பலர் விரும்பி வருகின்றனர். ஆனால் பல அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 34 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி 2022 – 23ஆம் கல்வியாண்டில் 7,500 திறன் வகுப்பறைகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் 7 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான பள்ளிகள் சென்னையில் அமைக்கப்படும் என்றும், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

6 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி உத்தரவு!

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் எனவும், மாணவர்களின் உடல்நலன் காக்க சிறப்பு பயிற்சிகளும், மனநலம் காக்க விழிப்புணர்வு வாரமும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இறுதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 இடங்கள் நிரப்பப்படும். அவற்றில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 9,000 பேர் பணியில் நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!