தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் வகுப்புகள்!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக “நான் முதல்வன் என்ற திட்டத்தை” தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் அறிமுகப்படுத்திருந்தார். இத்திட்டத்தின் கீழ், மாணவர்களின் மொழித் திறமையை மேம்படுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியிருந்தார். இந்த அறிவிப்பின் படி இன்று முதல் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளது.
“நான் முதல்வன்” திட்டம்:
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது; இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. மாணவர்கள் படித்திருக்கிறார்கள்; ஆனால் போதிய திறமை இல்லை. அவர்களின் திறமை குறைவு பற்றி கவலைப்பட வேண்டிய சூழலில் நாம் தத்தளித்துக் கொண்டுள்ளோம்.
நாட்டில் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு – அரசின் அதிரடி முடிவு!
அதை நீக்கவே, நான் முதல்வன் திட்டம் அமலுக்கு வர உள்ளது என முதல்வர், திட்டம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்; இந்தியாவின் இளைய சக்தியைப் பார்த்து உலக நாடுகள் அஞ்சுகின்றன. இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும் என்று கூறியிருந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, நல்ல திட்டங்களை முதல்வர் அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் எதிர்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க “நான் முதல்வன்” திட்டமும் செயல்பட உள்ளன.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இன்று முதல் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இணையவழி நேரலை அமர்வுகள் ஆரம்பமாக உள்ளது. அதன்படி,12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இன்று மற்றும் ஏப்ரல் 22 ஆகிய தேதிகளிலும், கலை மற்றும் வணிகம் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு நாளை மற்றும் ஏப்ரல் 23 ஆம் தேதியும் இணையவழி நேரலை அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த இணையவழி நேரலை அமர்வுகளில்,12 ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்களின் உயர் கல்வியின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம், நுழைவுத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற நுணுக்கங்களை அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.