நாட்டில் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு – அரசின் அதிரடி முடிவு!
நமது நாட்டின் அண்டை நாடான இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
மீண்டும் ஊரடங்கு:
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், தற்போது பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் போனதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், உணவு பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நாட்டில் தினம்தோறும் 12 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாகன எரிபொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டு செல்கின்றனர்.
மேலும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் இலங்கை நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பம் தான் என்று அந்த நாட்டின் மக்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து 9 வது நாளாக போராடி வருகின்றனர். பொது மக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவுகள் பெருகி கொண்டே வருகிறது. அதனால் அதிபருக்கு பெரிய குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த போராட்டம் அதிபர் மாளிகை முன்பு நடைபெறுவதால் அங்கு ராணுவம் மற்றும் போலீசார் நிரப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தற்போது நாட்டில் ஒரு வாரத்திற்கு அதாவது வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாக அரசின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே, உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களுக்கு மேலும் கோபத்தை உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது.