பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் தாமதமாக தொடங்கபட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மே மாதம் வரை பள்ளிகள் செயல்படும் என்று சொல்லப்பட்டிருப்பதை போலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் கோடை விடுமுறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை:
உலக அளவில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த 2 வருடமாக நாட்டில் பல மாற்றங்கள் அமைந்தது. அதில் பள்ளி, கல்லூரிகளும் ஒன்றாகும். ஏனெனில் ஆன்லைன் வாயிலாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு நோய் தொற்று பரவலின் தாக்கம் குறைந்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ல் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்டது. இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெறும் சூழ்நிலை அமைந்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மே 13 முதல் ஜூன் 12 வரை கோடை கால விடுமுறையாக கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து சில நாட்களாகவே மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வந்ததால் தற்போது அம்மாநில கல்வித்துறை அமைச்சர், எப்போதும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் முடித்து அதன் பின்னர் கோடை விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
பாத்ரூமில் வழுக்கி விழுந்த முல்லை – தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
ஆனால் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை விடப்பட்டதால், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகளை நடத்துமாறும், மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமாறும் மகாராஷ்டிரா கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், விதர்பா பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் செயல்படும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.