தமிழகத்தில் ஏப்.19ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. அதனால் இத்தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 19ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கோவில் திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா தமிழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. மேலும் இத்தினத்தில் பெரும்பாலான கோவில்களில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவிலில் தேர் திருவிழா நடத்த கொடியேற்றம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலும் கொடியேற்றம் நடைபெற்றது. அத்துடன் இங்குள்ள சமயபுரம் மாரியம்மன் தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதப்படுகிறது. இந்த புகழ்பெற்ற கோவிலில் அமைந்துள்ள அம்மன் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டு விரதம் முடிந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று கொள்கிறது.
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!
மேலும் இங்கு ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகம் வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.