தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
அரியலூர் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 18ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதை அடுத்து பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியது. அதனை தொடர்ந்து 10,12ம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளுக்கு ஆண்டுத்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களை முன்னிட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுறையை அறிவித்து வருகிறது.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடச்சியாக நாளை அரியலூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இங்கு ஸ்ரீராம நவமி அன்று 10 நாள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு தேர் திருவிழா ஏப்ரல் 18ம் தேதி (திங்கட் கிழமை) நடைபெற உள்ளது. அதனால் அம்மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். மேலும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு மற்றும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி தேர்வுகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.