ஏப்ரல் 14ம் தேதி மதுபான கடைகள் மூடல் – காவல்துறை உத்தரவு!
புதுவையில் ஏப்ரல் 14ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளையும் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மது விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள்
தமிழகத்தில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மற்ற கடைகளை தொடர்ந்து மதுக்கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மதுப் பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மற்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் பகுதி நேரமாக திறக்கப்பட்ட நிலையில் மதுக்கடைகளை திறக்க கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பகுதி நேரமாக மது கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டும் மதுக்கடைகள் மூடப்பட்டது.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!
மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் வகையிலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கிலும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. தேர்தல் முடிந்து வழக்கம் போல மதுக்கடைகள் இயங்கிய நிலையில் மது பாட்டில்களின் விலை ஏற்றப்பட்டது. இந்த நிலையில் நாளை (ஏப்ரல் 14) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாவீரர் கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களை மக்களுக்கு வலியுறுத்தியவர்.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி யூனியன் பிரதேசமான புதுவையில் , காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கூடங்கள் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட நாளில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.