தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதில் ஏதேனும் தவறு இருப்பின் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் குவிந்தன. அதனால் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் வங்கி அதிகாரி உட்பட இதற்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதில் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெறுவது, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது.
கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – இந்திய துணைத் தூதரக சேவை நிறுத்தம்!
அதனால் தள்ளுபடிக்கு பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்த 48 லட்ச நபர்களில் இந்த நிபந்தனைக்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நகைக்கடன் பெற்றவர்களில் தள்ளுபடி பெற தகுதியான நபர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ப.ரவிக்குமாா் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பில் இவர் கூறியதாவது, நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியான நபர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தள்ளுபடி பெற தகுதி இருந்தும் தங்களின் பெயர் இடம் பெறவில்லை எனில் இது குறித்து சேலம், ஆத்தூா், ஓமலூா், சங்ககிரி சரக துணை பதிவாளர் அலுவலகங்களில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் 30 நாட்களுக்கு பிறகு மேல்முறையீடு செய்தால் அந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.