கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – இந்திய துணைத் தூதரக சேவை நிறுத்தம்!

0
கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - இந்திய துணைத் தூதரக சேவை நிறுத்தம்!
கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - இந்திய துணைத் தூதரக சேவை நிறுத்தம்!
கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – இந்திய துணைத் தூதரக சேவை நிறுத்தம்!

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருவதால் கடும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்திய துணைத் தூதரகம், தற்காலிகமாக தனது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

கொரோனா பரவல்:

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவும் தன்மையை கொண்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கைகள் தினசரி அதிகரித்தது. இந்த வைரஸ் தொற்று மேலும் உருமாற்றம் அடைந்து பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. வளர்ந்த மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகளும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டனர். நோய் தடுப்பு பணியாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

WhatsApp செயலியை உபயோகிப்பவரா நீங்கள் – செய்திகளை எப்படி ஃபேக் அப் செய்வது? முழு விவரம் இதோ!

அதன் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நேரத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கொரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மட்டும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதன் விளைவாக தற்போது அனைத்து நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில்கள் வரை அனைத்தும் மீண்டும் வழக்கம் போல இயங்கி வருகிறது.

இந்த நேரத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பு நடவடிக்கையாக அந்நகரில் கடந்த 3 வாரங்களாக கடும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. , ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்திய துணைத் தூதரகம், தற்காலிகமாக தனது சேவைகளை நிறுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே முக்கிய அலுவலக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீன பிராந்தியத்தில் உள்ள இந்திய குடிமக்கள் அவசர தூதரக சேவைகளைப் பெற பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!