தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 14, 15, 16 மற்றும் 17 என தொடர்ந்து நான்கு நாட்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் தான் பாடம் கற்பிக்கப்பட்டுவந்தது. தற்போது கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்த காரணத்தினால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – VIP தரிசனம் ரத்து!
ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் காரணத்தினால் வெகு வேகமாக பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் சனிக்கிழமையும் கூட பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் வைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டால் தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கொரோனா தொற்றிற்கு பிறகு தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்ததால் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுவது கடினம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர்.