திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – VIP தரிசனம் ரத்து!
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியின் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவர். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் உள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் ஓரளவுக்கு தொற்று குறைந்துள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பழையபடி பக்தர்களுக்கான அனைத்து சலுகைகளையும் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!
சமீபத்தில் தான் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம், அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் பக்தர்களுக்காக துவங்கப்பட்டது. மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் சலுகையும் துவங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த வாரம் தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி வருவதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகமாக கூட்டம் இருக்குமென்பதால் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதங்கள் மூலம் விஐபி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படாது. எனவே, முக்கிய பிரமுகர்களுக்கு சிபாரிசு கடிதங்களை வழங்க வேண்டாமென தேவஸ்தானம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.