அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 34 சதவீதமாக உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்தது. அதன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் 2021 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உடன் HRA உயர்வு? முழு விவரம் இதோ!
அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியானது 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திற்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதில் 3% அகவிலைப்படி உயர்வு ஏற்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இவை கடந்த அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.
ஆதார் கார்டு போலியானதா? உண்மையானதா? கண்டறிவதற்கான வழிமுறைகள் இதோ!
அதன் தொடர்ச்சியாக தற்போது புதுவையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நீதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் அனைத்து துறை செயலர்கள், பிராந்திய தலைமைக்கும், துறைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் தெரிவித்தாவது, புதுவையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு 31% இருந்து 34 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.