மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உடன் HRA உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி (DA) சலுகைக்கு பின்னர் அவர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) விரைவில் உயர்வடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
HRA அதிகரிப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் 7வது ஊதியக் குழுவின் கீழ் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்தியது. அந்த வகையில் அனைத்து ஊழியர்களுக்கும் இப்போது அகவிலைப்படி (DA) தொகை 34 சதவீதமாக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது DA உடன், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) உட்பட மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மற்ற உயர்வுகள் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு வழங்கும் உதவித்தொகை!
இந்த HRA அதிகரிப்பு, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக DA உடன், HRA தொகையும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு உயர்த்தப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதம், DA 25 சதவீதத்தை தாண்டியபோது அரசு ஊழியர்களின் HRA உயர்த்தப்பட்டது. தொடர்ந்து DA 28 சதவீதமாக உயர்த்தப்பட்ட பிறகு HRA தொகையும் உயர்த்தப்பட்டது. எனவே, சமீபத்திய DA உயர்வுக்கு பிறகு HRA அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உடன் HRA உயர்த்தப்பட்டால் அவர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். ஒவ்வொரு பணியாளரின் HRA கொடுப்பனவு அவர்கள் வசிக்கும் நகரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதன் படி X வகை நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு தற்போதைய 27 சதவிகித HRA வழங்கப்படுகிறது. Z பிரிவு நகரங்களில் உள்ளவர்களுக்கு HRA 18 சதவிகிதமாக இருக்கிறது. இப்போது HRA அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படலாம் என்று கணிப்புகள் எழுந்திருக்கிறது.