தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு வழங்கும் உதவித்தொகை!
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் தற்போது வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க இருப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதவித்தொகை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற வருடம் இறுதியில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்தனர். இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப் பட்டு வருகின்றது. இந்த வருட துவக்கத்தில் tnpsc குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளையும் வெளியிடவுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி இருந்தது.
ஆதார் கார்டு போலியானதா? உண்மையானதா? கண்டறிவதற்கான வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் ஆ. ராமநாதன் ஒரு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு உதவித்தொகை தரும் திட்டம் ஆகும். மேலும் இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற மாணவர்கள் இதற்கு பதிவு செய்யலாம் என்றும் அறிவித்து உள்ளனர்.
நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு நடவடிக்கை!
மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர் இந்த அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றால் போதும். அதனை தொடர்ந்து ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். இது தவிர, உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்று சான்றிதழ், சுயவிவரம், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
Super