மார்ச் 28 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கும் முடிவு என்ன?
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில்,கொரோனா வைரஸ் நெதர்லாந்து நாட்டிலும் பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்:
கொரோனா கொரோனா தொற்று, அண்டை நாடான சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கியது. இதன் தாக்கம் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்தது. இந்த தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும், வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கிடையே கொரோனா பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் கடந்த சில வாரங்களாக, கொரோனா எழுச்சி மீண்டும் எழத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் 2 நாட்கள் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்? அமைச்சர் விளக்கம்!
இதன் காரணமாக ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சுகாதாரதுறை தடுப்பு விதிமுறைகளில் தளர்வு அளித்து உள்ளது. அந்த வகையில் கடந்த 23 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்பது போன்ற பல்வேறு தளர்வுகளை, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.
அவர், கொரோனா தொற்றுடன் பொது மக்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நெதர்லாந்து சுகாதாரத் துறை அதிர்ச்சியில் திணறி வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, பிரதமர் மார்க் ரூட்டேவுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைவில் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்,கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.