ஆகஸ்ட் 16 முதல் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி கட்டாயம் – அரசு அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைவதற்கு கொரோனா தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான ஜம்மு, இமாச்சல பிரதேசம் ஆகியவற்றிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கபடுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமெடுத்து பரவி வருகிறது. அதிகரிக்கும் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் முயற்சியாக கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு கட்டணத்துடன் கொள்முதல் செய்தது.
டிஎன்பிஎஸ்சி பொறியியல் பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங் அறிவிப்பு!
முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசின் அனுமதி பெற்று 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாட்டில் 63,80,937 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸிடம் இருந்து உடலை பாதுகாக்கிறது. அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைவதற்கு கொரோனா தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான ஜம்மு, இமாச்சல பிரதேசம் ஆகியவற்றிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் கல்வி நிலையங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.