தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!
தமிழக அரசின் போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுநர்கள் உட்பட 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
அமைச்சர் பேட்டி:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதன் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜூலை 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் தொடங்கி உள்ளன. மேலும் அரசு நகரப் பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், இத்துறையில் உள்ள ஏராளமான குறைபாடுகள் களையப்பட்டு முழுவதுமாக சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
மேலும் தமிழகம் முழுவதும் 14,215 பேருந்துகள் தற்போது இயங்கி வருகிறது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், கிட்டத்தட்ட 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார். SETC பேருந்துகளில் 1,300 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவை உள்ளதாக கூறியுள்ளார். அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு இது தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா? வைரலான தகவலின் உண்மை நிலை!
தொடர்ந்து பேசிய அமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் நகர பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படும். திருக்குறள் பலகைகள் அமைக்கும் பணிகள் பேருந்துகளில் இன்னும் 10 நாட்களில் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஓட்டுநர் உரிமம் பெறுவதில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகள் தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறி உள்ளார்.