அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகளில் குளறுபடிகள் – உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில் குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள் புகார் அளித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் புகார்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து? கல்வி நிபுணர்கள், ஆசிரியர்களின் கருத்து!!
அந்த தேர்வு முடிவுகளில் 70 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இதனால் பல மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். முன்னதாக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளில், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கேமராவால் கண்காணிக்கப்பட்டனர். ஆனால் தற்போது 20க்கு மேற்பட்ட காரணங்களை கூறி மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், “கடந்த பிப்ரவரி மார்ச் மாதம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வுகளில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்”,என அவர் தெரிவித்துள்ளார்.