தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு வயது வரம்பு – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 15 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மத்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 ஆம் தேதிக்கு பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது. தற்போது முதற்கட்டமாக அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவ ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அச்சம் – ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!
இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் 55 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அமல்படுத்தப்பட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பணியில் ஈடுபடுத்தபட உள்ள ஊழியர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.