ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை – மாநில அரசு முடிவு!!
கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை காரணமாக புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பொது கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பள்ளிகள் திறப்பு:
கேரளாவில் கொரோனா பரவலுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்று வருகின்றனர். ஜூன் 10 க்குள் எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் வெளிவரும். மேலும் பிளஸ் ஒன் தேர்வுகள் நடத்துவது குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா பரவல் இன்னும் தீவிரமாக இருப்பதால், ஜூன் தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஜூன் மாத இறுதியில் திறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. நேரடி வகுப்புகள் நடத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், மிக மோசமான சூழ்நிலையை மனதில் வைத்து டிஜிட்டல் வகுப்புகளுக்கு கல்வித்துறை தயாராகி வருகிறது. இருப்பினும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் நேரடியாக கலந்துரையாடுவதே கற்றல் திறனை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் உயர்வு – அறிவிப்பு வெளியீடு!!
புதிய கல்வியாண்டில், குழந்தைகள் ஆன்லைன் பாடங்களை முறையாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். இருப்பினும், நேரடி கல்வி இல்லாத நிலையில் மன அழுத்தம், குறிப்பாக ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசிக்கப்படும்போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.