தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளை திறந்திருக்க வேண்டும் – கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் தேர்தல் பணிகள் நடக்க இருப்பதால் இன்று முதல் தேர்தல் முடியும் வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 2021 ஏப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் படை வீரர்கள் போன்றவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் – ஜூன் முதல் நடத்த திட்டம்!!
தேர்தல் பணிகள்:
தேர்தல் பணிகளில் ஈடுபட இருக்கும் பணியாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் சேகரித்து, அவர்களுக்கான நான்கு கட்ட தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. தேர்தல் வாக்குப்பதிவு அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு வளாகங்களில் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளை தேர்தல் வாக்குப்பதிவு பணிகளுக்காக தயார்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
அதன்படி, தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகளில் மார்ச் 22, 23ம் தேதிகளில் வாக்குப்பதிவு நேரலை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், சோதனை பயிற்சிகள் நடைபெற இருப்பதால் மார்ச் 27ம் தேதியான இன்று முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வாக்குச்சாவடிகளான பள்ளிகள் தொடர்ந்து திறந்திருக்க வேண்டும்.
ஏப்ரல் 3, 4ம் தேதிகளில் முதல்கட்ட சோதனை வாக்குப்பதிவு மற்றும் ஏப்ரல் 5ம் தேதிகளில் இரண்டாம் கட்ட சோதனை வாக்குப்பதிவும் நடக்க இருக்கிறது. மேலும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும் மற்றும் கல்வி அதிகாரிகளும் வாக்குபதிவு நடக்கும் வாக்குச்சாவடிகளாக உள்ள பள்ளிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்