பள்ளிகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடப்படும் – மாநில அரசு அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவி வரும் கொரோனா காரணமாக புனேவில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த அறிவிப்பு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிகள் மூடப்படும்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 6 மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 50,000க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 35,000க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
எனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் நாக்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – அதிகாரிகள் அறிவுறுத்தல்!!
இந்நிலையில் புனே மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை இன்று நடைபெற்ற கொரோனா ஆலோசனை கூட்டத்தில் மாநில துணை முதல்வர் அஜித்பவார் வெளியிட்டார்.