பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அங்கீகாரம் – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!!
2021-22 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழகத்தில் உள்ள தன்னாட்சி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள தன்னாட்சி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு இந்த பணியை மேற்கொள்கிறது.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து அண்ணா பல்கலை சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை, “தமிழக்தில் உள்ள தன்னாட்சி மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகள் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அங்கீகார சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 24 நடைபெறும்!!
இந்த விண்ணப்பங்கள் அனுப்ப மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கு விண்ணப்பிக்க கல்லூரிகள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மையத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்