மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? அமைச்சர் விளக்கம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? அமைச்சர் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? அமைச்சர் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? அமைச்சர் விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள திருத்தம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான 8வது மத்திய ஊதியக்குழு அமைப்பு குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இது குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8வது ஊதிய குழு:

7வது ஊதிய குழுவின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் ஜனவரி மாதத்தில் ஒரு முறையும் ஜூலை மாதத்தில் ஒரு முறையும் திருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பணவீக்கத்தைப் பொறுத்து இதில் மாற்றம் இருக்கும். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி கணிசமான அளவில் உயர்த்தப்படும். இருப்பினும் கொரோனா வருகையால் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.மேலும் கடந்த மார்ச் மாதத்தில் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அடுத்ததாக இந்த (ஆகஸ்ட்) மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று ஊழியர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். அத்துடன் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகுதியாக உள்ளதால் இம்முறை அகவிலைப்படி 4% அல்லது 5% அதிகரிக்கப்படலாம் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் அகவிலைப்படி 5 % உயர்த்தப்பட்டால் DA எண்ணிக்கையானது தற்போதைய 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதம் ஆக உயரும். இந்நிலையில், சில வாரங்களாக அரசுத் துறைகளில் 8வது ஊதியக் குழு குறித்து விவாதம் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலின்படி, 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளுக்கு இந்த மாதத்திற்கான விடுமுறை தினங்கள் – முழு பட்டியல் வெளியீடு

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தார். அதாவது, “மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கு இதுபோன்ற எந்த முன்மொழிவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்ற ஒரு கேள்விக்கு திரு சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியக் குழுவை உருவாக்க அரசாங்கம் முன்மொழிந்தால். இது ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும். மேலும் 2014 பிப்ரவரியில் 7வது ஊதியக் குழுவை அரசாங்கம் அமைத்தது. குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!