TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்னும் 8 நாட்கள் மட்டுமே!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 7.85 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இன்னும் தேர்வுக்கு விண்ணப்பிக்க 8 நாட்களே உள்ளது.
TNPSC Group 4 & VAO
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேட ஆரம்பித்தனர். மேலும் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தேர்வுகளை நடத்தவும் கோரிக்கை எழுந்தது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக 2 வருடங்களாக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை TNPSC போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனால் இந்த வருடம் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தேர்வாணையம் தேர்வுகளுக்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் குரூப் 2,2A தேர்வு அறிவிப்பு வெளியானது. விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்துள்ளது. மே 21,ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தபடும் TNPSC Group 4 & VAO குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 28ம் தேதி வெளியானது.
தற்போது ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட இத்தேர்வுக்கு இதுவரை 7.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28 கடைசி நாளாகும். இன்னும் 8 நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.