இரவெல்லாம் வீட்டிற்கு வராத கோபி, அடித்து நொறுக்கிய தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் நாளை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை கண்டுபிடித்து வெளியே வர வைக்கிறார். இந்நிலையில் இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் கோபி குடும்பத்தை பார்க்காமல் ராதிகா வீட்டில் தங்கியதால் கோவப்பட்ட ராமமூர்த்தி கோபியை அடித்துவிடுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கதையில் பெரிய திருப்பம் ஒன்று வந்துள்ளது. அதில் கோபி ராதிகா பாக்கியா நட்பிற்கு இடையே மாட்டிக் கொண்டு தவித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு சாதகமாக ஒன்று நடந்துள்ளது. அதாவது பாக்கியாவிற்கும் ராதிகாவிற்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்தி கோபியின் திருவிளையாடல்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய எபிசோடில் எழில் பாக்கியாவை காப்பாற்ற பல முயற்சிகளை செய்கிறார்.
கோபியை பற்றி உண்மை தெரியும் என சொன்ன பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஜானுவின் உதவி உடன் பாக்கியா சமைத்த உணவை பரிசோதனை செய்ய அதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வருகிறது. அதனால் எழில் பாக்கியாவை வெளியே விட சொல்ல கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும் என போலீசார் சொல்கின்றனர். அதனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தமாக இருக்கின்றனர். ஈஸ்வரி கோபிக்கு போன் செய்ய அப்போது கோபியிடம் விவரத்தை சொல்கிறார். ஆனாலும் கூட கோபி ராதிகா வீட்டில் இருந்து வரவில்லை.
இந்நிலையில் பாக்கியாவை கஷ்டப்பட்டு எழில் வெளியே கொண்டு வருகிறார். எல்லாம் முடிந்த பின் கோபி வந்து என்ன பிரச்சனை பாக்கியா எங்கே என கேட்க ஈஸ்வரி நேற்று முழுவதும் வெளியே இருந்துவிட்டு இப்போ வந்து ஏன் கேட்கிறாய் என கோவமாக பேசுகிறார். இரவெல்லாம் வீட்டிற்கு வராமல் யார் வீட்டில் தங்கினாய் என ஈஸ்வரி கேட்க அப்போது ராமமூர்த்திக்கு கோவம் வந்து கோபியை சரமாரியாக தாக்குகிறார். பின் எல்லாரும் தாத்தாவை தடுக்க ஆனாலும் அவர் பயங்கரமாக தாக்குகிறார்.