கோபியை பற்றி உண்மை தெரியும் என சொன்ன பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா கஷ்டமான நிலையில் இருக்க எழில் மற்றும் செழியன் முயற்சி செய்து பாக்கியாவை காப்பாற்றுகின்றனர். கோபிக்கு போன் செய்து சொல்லியும் கூட கோபி வீட்டிற்கு வரவில்லை இந்நிலையில் பாக்கியாவிற்கு கோபி மீது சற்று வருத்தம் இருக்க, ஆனால் கோபி மீண்டும் பாக்கியாவிடம் சத்தம் போடுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல விறுவிறுப்பான காட்சிகள் இந்த வாரம் வந்தது. கதையில் பெரிய திருப்பம் ஒன்று நடந்துள்ளது. ராதிகா பாக்கியா நட்பாக இருக்கின்றனர். எப்படி கதை செல்லும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது பாக்கியாவிற்கு எதிராக ராதிகா மாறிவிட்டார். அதனால் கதை இனிமேல் தான் சூடு பிடிக்க இருக்கிறது. இந்நிலையில் ராதிகா பாக்கியாவிடம் சமையல் ஆர்டர் ஒன்றை கொடுக்க அதை நல்லபடியாக பாக்கியா செய்து முடிக்கிறார்.
ஆனால் அதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது. ஆனால் அதில் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்ற உண்மை நிரூபணமாகிவிட்டது. இருந்தாலும் பாக்கியா போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை நினைத்து ஈஸ்வரி மற்றும் இனியா ராமமூர்த்தி என அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். கோபிக்கு போன் செய்ய ஆனால் கோபி போனை எடுக்கவில்லை. அதனால் கஷ்டப்படும் நேரத்தில் கோபி இல்லை என ஈஸ்வரிக்கு கோவம் வருகிறது.
மறுபக்கம் ராதிகாவை கோபி வீட்டிற்கு அழைத்து வர கோபியை தன்னுடன் இருக்க சொல்லி சொல்கிறார். அதனால் கோபி வீட்டிற்கு போக முடியாமல் இங்கையே தங்கி விடுகிறார். மறுநாள் பாக்கியா வீட்டிற்கு வர கோபியிடம் நான் கஷ்டத்தில் இருக்கும் போது ஏன் வரவில்லை என கேட்கிறார். அதற்கு கோபி ஏதோ சொல்லி சமாளிக்க எனக்கு உண்மை எல்லாம் தெரியும் என பாக்கியா சொல்கிறார். அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைந்தாலும் பாக்கியாவிற்கு சந்தேகம் வந்துள்ளதால் இனி உஷாராக இருக்கப்போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது.