8 வங்கிகளின் காசோலை ஏப்ரல் 1க்கு பின்னும் செல்லும் – வங்கி அதிகாரிகள் தகவல்!!
மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறு வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க உள்ளதால் பழைய வங்கிகளில் காசோலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னர் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் வங்கி அதிகாரிகள் தற்போது ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னரும் செல்லும் என தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கான அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதனை திரும்ப செலுத்த முடியாமல் அவை வாராக்கடனாக இருந்தது. இதனால் பல சிறிய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்ய மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறு லாபம் ஈட்டும் வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் இணைக்க உள்ளதாக தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
அதற்காக தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி போன்றவற்றை தேர்வு செய்தது. இந்த வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட பெரிய வங்கிகளிடம் இருந்து செக் புக் மற்றும் பாஸ்புக் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் IFSC மற்றும் MICR கோட் போன்றவை மாற்றப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!
இதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1 ஆம் தேதி என தெரிவித்தது. அதற்கு பின்னர் அவை செல்லாது என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுடன் கேட்ட போது ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னர் காசோலைகள் செல்லாது என்ற தகவல் தவறானது. புதிய காசோலைகள் பெற வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பழைய காசோலைகள் இதனால் நிறுத்தப்படாது. அதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட உள்ளது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.